By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓய்வுபெற்ற எஸ்.ஐ படுகொலை! சதீஸ் ராஜா கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓய்வுபெற்ற எஸ்.ஐ படுகொலை! சதீஸ் ராஜா கண்டனம்
கனஂனியாகுமரி

ஓய்வுபெற்ற எஸ்.ஐ படுகொலை! சதீஸ் ராஜா கண்டனம்

Last updated: March 20, 2025 11:26 am
March 20, 2025
46 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 19

பாஜக சிறுபான்மை அணி மாநில பொதுச் செயலாளரும், பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த மசோதா விழிப்புணர்வு குழு உறுப்பினருமான சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வக்பு வாரியத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பது அதன் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதால் தான். ஆனால் சிலர் அது குறித்து இஸ்லாமியர்களிடம் வேண்டும் என்றே விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக பாஜக சார்பில், வக்பு திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த குழுவே அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதுமே வக்பு சொத்துக்களில் பல்வேறு பிரச்னைகளும், அதன் மூலம் சட்ட சிக்கல்களும் ஏற்பட்டு வருகின்றன. இதைக் களையும் வகையிலும், வக்பு சொத்தில் வெளிப்படைத்தன்மையும், சமத்துவமும் ஏற்படுத்தவும் தான் திருத்த மசோதாவே கொண்டுவரப்பட்டுள்ளது. வக்பு சொத்துக்களின் மீதான திருத்தம் ஏன் தேவை என்பதற்கு நெல்லையில் நடைபெற்றிருக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை உதவியாளர் கொலை சம்பவமே சாட்சி!

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் என்ற பிஜிலிபாய். ரமலான் நோன்பு காலமான இன்று அவர் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருக்கும்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்க மேற்கொண்ட முயற்சியே இந்த கொலை சம்பவத்தில் முடிந்துள்ளது. வக்பு சொத்து என்பதே இறைவனின் சொத்து ஆகும். முன்னோர்கள் தானமாக வழங்கிய நிலம் அது. அந்த சொத்தினை ஆக்கிரமித்திருப்பதற்கு எதிராக களம் ஆடியதாலேயே ஓய்வுபெற்ற எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிலும் ஜாகீர் உசேன் தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்தும், தான் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படும் அபாயம் இருக்கிறது என்பது குறித்தும் பலமுறை காவல்துறையினருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக அவரே பேசியும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதன் பின்னரும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் இப்பிரச்னையை சரியான முறையில் அணுகாமல், காவல்துறையினர் மெத்தனமாகச் செயல்பட்டதால் இன்று ஜாகீர் உசேன் படுகொலை சம்பவம் அரங்கேறிவிட்டது. இத்தனைக்கும் ஜாகீர் உசேன் தன் பணிக்காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாதுகாப்பு பணி செய்தவர். அவருக்கே இதுதான் நிலமை! இதுதான் திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கின் லட்சணம்!

இந்த படுகொலை சம்பவத்தைக் கண்டிக்கும் அதேநேரத்தில், வக்பு சட்டத் திருத்த மசோதாவின் தேவையையும் இனியேனும் அனைவரும் உணரவேண்டும். இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து முன்னோர்கள் தானமாக வழங்கிய நிலங்களை மீட்கும் முன்னெடுப்புதான் வக்பு திருத்த மசோதா என்பதை அனைவரும் உணர்வோம்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் போக்சோவில் கைதான 2 பேர்
பத்திரகாளியம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு
குமரி அனந்தன் மறைவு:நாதக தீபக் இரங்கல்
காமராஜர் நினைவு நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு

January 27, 2025
106 Views
ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள்
முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழா
போதை மறுவாழ்வு மையம் 4 – ஆம் ஆண்டு
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் விவசாயம் செழிக்க நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்: வேட்பாளர் ஹிம்லர் வாக்குறுதி!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account