மார்த்தாண்டம், செப். 10 –
கொல்லங்கோடு அருகே கல்வெட்டான்குழி பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் மனைவி கீதா குமாரி (55). இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் மனைவி இரண்டு பேரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் கீதா குமாரி வாயில் நுரை தள்ளிய நிலையில் அறையில் படுத்து கிடந்துள்ளார். இதை பார்த்த சுதர்சனன் உடனடியாக உறவினர்கள் உதவியுடன் கீதா குமாரியமிட்டு களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சிகிச்சை கொண்டு சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா குமாரி இன்று உயிரிழந்தார்.
இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


