நாகர்கோவில், டிசம்பர் 22 –
தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கடந்த 19ம் தேதி முதல் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் எம்.ஆர்.பி. செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மருத்துவக் கல்லூரியில் இன்று 3வது நாளாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று போராட்டத்திற்கு வந்த செவிலியர்கள் கலைந்து செல்லாமல் விடிய விடிய தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் போராட்டம் நடந்தது. இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


