நாகர்கோவில், பிப். 2 –
நாகர்கோவிலில் வைத்து கவிஞர் தமிழ்க்குழவியாரின் குறளகம் அமைப்பின் 16- வது ஆண்டு விழா, ஐம்பெரும் விழாவாக காலை தொடங்கி மாலை 7 மணி வரையிலும் நடைபெற்றது.
நடைபெற்ற தொடர் நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி மற்றும் புத்தக வெளியீடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் பொன்னீலன், வழக்கறிஞர் இரத்தினசாமி, தமிழறிஞர்கள் பார்த்தசாரதி, இரத்தினசாமி, புலவர் சிவதாணு, மருத்துவர் இராஜேஸ்கோபால், இனியன்தம்பி, முத்துக்கருப்பன், முனைவர் மலர், குமரி ஆதவன், கடிகை ஆன்றனி, சுந்தரலிங்கம், பொன்னுலிங்கம், எழுத்தாளர் தாகூர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் அதன் நிறுவனர் முத்துக்குமார் கலந்துக் கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.



