By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கால்வாய்கள் சாலையாக மாற்றம்: அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கால்வாய்கள் சாலையாக மாற்றம்: அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கால்வாய்கள் சாலையாக மாற்றம்: அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்

Last updated: June 6, 2026 6:51 pm
June 6, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 6 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் உள்ளாட்சி நிர்வாகங்களால் பாசன கால்வாய்கள், குளங்கள் உட்பட்ட நீர்நிலைகளை அழித்து சேதப்படுத்தி, சாலையாக மாற்றப்படும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை தடுத்து நிறுத்தி, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டிய நீர்வளத்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதும், அதன் காரணமாக கடைவரம்பு விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயமும், இயற்கை எழிலும் அழிந்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

அந்த வகையில், கடந்த சில வாரங்களில் பட்டணங் கால்வாயின் கிளைக் கால்வாய்களான காட்டுக்கடை – வாணியக்குடி – ரீத்தாபுரம் கிளை கால்வாய் மற்றும் காட்டுக்கடை -சைமன்காலனி – ரீத்தாபுரம் கிளை கால்வாய் ஆகியவற்றிலுள்ள ‘சைபன்கள்’ உடைத்து அழிக்கப்பட்டு, மண்ணால் மூடப்பட்டு, கான்கிரீட் மற்றும் தார் போட்டு பாலப்பள்ளம் பேரூராட்சி நிர்வாகத்தால் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல கிலோமீட்டர் தூரம் சானல் மற்றும் கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் கால்வால்கள் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.

இத்தகைய குற்றச்செயல்கள் நடைபெறும் போது நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தடுத்து நிறுத்த வேண்டும். சேதப்படுத்திய நபர்கள் மீது காவல்துறையில் முறையாக புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தியவர்களை வைத்தே கட்டுமானங்களை சீரமைக்க வைக்க வேண்டும். அல்லது அதற்கான தொகையை குற்றவாளிகளிடம் இருந்து சட்ட ரீதியாக வசூலிக்க வேண்டும். என்ற சட்ட விதிமுறைகள் உள்ளது.

ஆனால், மேற்படி கால்வாய் சைபன்களை சமூக விரோதிகள் – ஒப்பந்ததாரர் என்ற பெயரில் உடைப்பதை நேரடியாக பார்த்த நீர்வளத்துறை பணியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர் போன்றோர் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன்- இது சம்பந்தமான தகவலையும் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை.

தற்போது நீரினை பயன்படுத்துவோர் சங்க ஆட்சிமண்டல உறுப்பினர் ஜஸ்டின்தாஸ் என்பவர் இது குறித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரடியாக புகார்மனு அளித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீர்வளத்துறையின் மேற்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிறகும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அடுத்தகட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேட்டு உயர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜஸ்டின் தாஸ் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாசி கொடை பந்தல்கால் நாட்டு விழா
தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை
குழித்துறையில் சமூக சேவகருக்கு விருது
இந்தியாவிலே யாரும் இதுவரை நிகழ்த்தாத போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு: பரதநாட்டிய மாரத்தான் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

January 23, 2025
74 Views
அலுவலக கூட்டணி நடைபெற்ற மக்கள் தீர்வு நாள்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவையில் இன்னோ வாலி வர்க்ஸ் முதன்மை மையம் திறப்பு
சுருளி அருவியில் குளிக்க தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account