தூத்துக்குடி, டிச. 6 –
தூத்துக்குடி மாவட்டம், புதூர் வட்டாரம், நாகலாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, மாவட்ட சுகாதார அலுவலர் கோவில்பட்டி அவர்களின் அறிவுரைகளின் பேரிலும் மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய மருத்துவ அலுவலர் தூத்துக்குடி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், நாகலாபுரம் எஸ்.கே.கே.இந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசீலா அனுமதியோடு பள்ளி மாணவ மாணவிகளை கொண்டு பள்ளி வளாகத்தில் வைத்து புகையிலை விழிப்புணர்வு உறுதிமொழியும் மற்றும் அதே பள்ளி மாணவர்களை கொண்டு பள்ளியை சுற்றி உள்ள வீதிகளில் புகையிலை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்த முகாமை நாகலாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன் வட்டாரம் சார்ந்த சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர்ராஜ், சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் டி.பி.சி. களப் பணியாளர்கள், பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் அலுவக பணியாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்



