கோவை, ஏப். 20 –
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் என் எம் சுகுமார் சூலூர் பஸ் நிலையம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் நேரில் சென்று சந்தித்தார். பொதுமக்கள் அவருக்கு வீரவால் கொடுத்தும் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் அப்பொதுமக்கள் இந்த பகுதியில் உள்ள குளம் சீரமைக்க வேண்டும், மின்விளக்குகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இவை அனைத்தும் தலைவர் இடத்தில் சொல்லி இந்த குறைகளை தீர்ப்பேன் என்று விசில் சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.



