தென்காசி, அக். 11 –
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தென்காசி நகரமன்ற தலைவர் சாதிர், தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கனிமொழி, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், திமுக பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



