மார்த்தாண்டம், ஜன. 19 –
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நேற்று இரவு கனிம வள லாரிகள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தது. அப்போது மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பெரிய கண்டெய்னர் மீன் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்பு சென்ற கோழி ஏற்றி சென்ற பெரிய கூண்டு லாரியின் மீது மோதியது. இந்த லாரி முன்னால் சென்ற கனிமவள லாரி மீது மோதியது. இதை அடுத்து அடுத்தடுத்து ஒன்றன் பின்பு ஒன்றின் மீது மோதி விபத்துக்கள் நடந்தது. இதனால் எதிர் திசையில் வந்த இரண்டு சொகுசு கார்கள் மீதும் கனிம வள லாரிகள் மோதியது.
கோழி வாகனத்தில் இருந்த கோழிகளுடன் இரும்பு கூண்டுகள் கவிழ்ந்து விழுந்ததில் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் இரு சக்கர வாகனத்தின் பின்னால் இருந்த நித்திரவிளையைச் சேர்ந்த தாசையன் மகன் ரமேஷ் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சாத்தான்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (47) என்பவர் படுகாயம் அடைந்தார்.
மேலும் அந்த வழியாக சென்ற இரண்டு சொகுசு கார்களில் இருந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் கனிம வள லாரி ஒன்றில் இருந்த ஓட்டுநர் சீட்டில் நசுங்கி சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சேர்ந்து டோரை உடைத்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டர் பாலம் முழுதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இதில் ஏழு டாரஸ் லாரிகள், ஒரு கண்டெய்னர் மீன் லாறி, ரெண்டு சொகுசு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பலத்த சேதம் அடைந்தது. வாகனங்கள் சேதமடைந்த சிதறி கிடந்ததால் காலை வரை வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதை அடுத்து போலீசார் பெரிய போராட்டத்திற்கு பின்னர் வாகனங்களை ஒதுக்கி சாலை போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



