நாகர்கோவில், ஜூலை 15 –
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளையொட்டி, நாகர்கோவில் அடுத்த பழவிளை சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை செலுத்தினர்.
இதில் இணைச் செயலாளர் பிரேம்குமார், முன்னாள் அமைச்சர் பச்சைமால், தொழிலதிபர் பால்ராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜன், ஆரிப், இணை அமைப்பாளர்கள் தங்கராஜ், மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் அசோக் செல்லம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மெர்சல் முகேஷ், தோவாளை மத்திய ஒன்றிய செயலாளர் விஜய், மாநகராட்சி மான்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா, 11வது வார்டு செயலாளர் ஆனந்த் செல்லம்,
12வது வார்டு நிர்வாகிகள் அசோக், மில்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



