ஆறுகாணி, மே 23 –
தேசிய காசநோய் கண்டறிதல் ஒழுப்பு திட்டத்தின் கீழ் நிக்ஷய் ஷிவிர் 100 நாள் நோய் கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புணர்வு ஆறுகாணி துணை சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமில் சித்த மருத்துவர் Dr. சுகன்யா காசநோய் குறித்தும், அதன் தாக்கங்கள், நோயின் ஆரம்ப அறிகுறிகள், நோய் கண்டறிந்த பின் சிகிச்சைகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார். இம்முகாமில் ஊர் மக்கள் கலந்து கொண்டு மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் பொடி வழங்கினார். இம்முகாமில் வார்டு கவுன்சிலர் பெமினா, பல் நோக்கு பணியாளர் அருள், புனித குமாரி மற்றும் சுகாதார செவிலியர்கள், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



