திருச்சி, மே 18 –
முசிறி அருகே திருத்தலையூர் மேலக்கொட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா, தனது தாய் வசந்தியுடன் இருசக்கர வாகனத்தில் துறையூர் அருகே கண்ணனூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெயசூர்யா காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜம்புநாதபுரம் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர் பாலமுருகன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



