சுசீந்திரம், ஏப். 9 –
சுசீந்திரம் அருகே உள்ள குலசேகரன் புதூர் லட்சுமிபுரம் பகுதியில் ஒற்றைப்பனை சுடலைமாட சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் தங்க முத்து என்பவருக்கு சொந்தமான குடும்ப கோவில் இன்று காலை தங்கமுத்து கோவிலுக்கு சாமி கும்பிட சென்று பார்க்கும் பொழுது கோவிலின் முன்பக்க கிரில் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த தங்கமுத்து சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கோவிலில் வைக்கப்பட்டிருந்த பித்தளை குத்துவிளக்கு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியல் பணம் மற்றும் ஒருபித்தளை விளக்கையும் திருடி சென்றது தெரியவந்தது.
உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடி கேமரா மற்றும் வழியாக சென்றவர்களிடம் மர்ம நபர்கள் யாரும் இங்கு நடமாடினார்களா என்று விசாரித்தனர். மேலும் உள்ளூரில் உள்ளவர்களா அல்லது வெளியூரில் இருந்து வந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு மரண நபர்களை தேடி வருகின்றனர்.



