ஏப்ரல்: 10 திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள திருப்பூர் குமரன் கல்லூரியில் 30 ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது விழாவில் கல்லூரியின் தலைவர் மற்றும் தாளாளர் கோவை மண்டலத்தின் வீட்டு வசதி சங்கத்தின் துணை பதிவாளர் திரு அர்த்தநாரீஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார்கள் மாணவியர் பேரவையின் பொறுப்பாளர் முனைவர் பொன்மலர் வரவேற்புரை ஆற்றினார்கள் இவ்விழாவில் 2024 25 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையை கல்லூரி முதல்வர் முனைவர் திருமதி வசந்தி அவர்கள் வாசித்தார்கள் நாமக்கல் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளர் திரு முருகேசன், காங்கேயம் வட்ட வீட்டு வசதி சங்கத்தின் செயலாளர் செல்வராஜ், திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளர் முத்துரத்தினம் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக வீரமங்கை வேலு நாச்சியார் அரிமா சங்கத்தின் தலைவர் திருமதி.நறுமலர் கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு சிகரத்தை நோக்கி என்னும் தலைப்பில் வலிகளைத் துடைத்து சமுதாயத்தில் எப்படி முன்னேற வேண்டும் என்று மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்கள் அதன்பின் பாரம்பரிய பரதநாட்டியம் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நாடகங்கள் யோகா ஆடை அலங்கார அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன நன்றியுறை கல்லூரி மாணவியர் பேரவை தலைவர் செல்வி. ராகவர்த்தினி கூறினார்கள் இதில் நிர்வாக அலுவலர் நிர்மல் ராஜ்,கல்லூரி பேராசிரியைகள் அலுவலர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



