By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்

Last updated: February 18, 2026 7:09 pm
February 18, 2026
43 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 18 –

குமரி மாவட்டம் வெள்ளமோடி மற்றும் குழித்துறை அருகே பாலவிளை உட்பட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக ஒரு வருடம் மண் எடுக்க குமரி மாவட்ட கனிம வள துறை உதவி இயக்குநர் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள மலை குன்று அழிக்கப்பட்டு அதில் இருந்த பாறைகளும் மற்றும் விவசாயத்திற்கு செல்லும் கால்வாய் பகுதிகளும் உடைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒரு டெம்போ மண் எடுக்க 600 ரூபாயை ஒரு வெளியூர் கும்பல் ஒன்று குழுவாக இருந்து வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க கூட கடுமையான சட்ட விதிகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெற வேண்டி இருக்கும் நிலையில், சுற்று சூழல் அனுமதி இன்றி மலை குன்று பகுதியை முழுமையாக அழித்து அதில் இருந்து சட்ட விரோதமாக மண் கொள்ளை நடத்த மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் ரகசியம் காத்து வருட கணக்கில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் எந்த அனுமதியும் இன்றி அதில் இருந்த பாறைகளையும் உடைத்து எடுத்து சட்ட விரோதமாக பாறைகளையும் உடைத்து கால்வாய்களையும் அழித்து மண் கடத்தி வருகின்றனர். இதற்கு பெரும் லஞ்சம் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக 5 சென்ட் 10 சென்ட் இடங்களில் வீடு கட்டுவதற்கு நிலத்தை சரி சமன் செய்ய அனுமதி கேட்கும் போது மிக கடினமான சட்ட வழிமுறைகளை பின்பற்றும் கனிமவளத்துறை பெரும் மண் கொள்ளை நடத்த விதிகளை தளர்த்தி பெருமளவு லஞ்சம் பெற்று அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைச்சர்கள் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் பெறுவதாக மேற்படி பணம் வசூல் செய்யும் கும்பல் கூறியதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை கேட்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்து கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாய சங்கங்கள் தற்போது வரும் 24ம் தேதி குமரி மாவட்டத்திற்கு வர இருக்கும் தமிழக முதல்வரிடம் நேரில் மண் கொள்ளை குறித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் சிலை அருகே நிறுவும் கல் தூண்
பணிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி
அரசு மருத்துவக் கல்லூரி பணியாளர் தற்கொலை
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

உலகின் மிகச் சிறந்த பத்துப் பள்ளிகளின் தேர்வுப் பட்டியலில் இடம்

June 18, 2024
99 Views
புதிய தார் சாலை அமைக்கும் பணி
அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன
ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா
தென்காசியில் தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பத்திரிக்கையாளர் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account