தஞ்சாவூர் ஏப்ரல் 13.
தஞ்சாவூரை சேர்ந்த கண் மருத்துவர் சிவ விக்னேஷ் எப்.ஏ.ஐ.சி.ஓ. விருது டெல்டாவில் முதல் முதலில் பெறுகிறார்.
இவருக்கு புதுடெல்லியில் நடைபெற்ற 40 வது ஆசிய பசிபிக் அகாடமி கண் மருத்துவ சர்வதேச மாநாடு மற்றும் அகில இந்திய கண் மருத்துவர் சங்க ஆண்டு மாநாட்டில் ஒளிவிலகல் சிகிச்சை யில் எப் .ஏ.ஐ.சி. ஓ.விருது வழங்கப்பட்டது.
இந்த விருதானது லேசிக்கருவிழி அறுவை சிகிச்சைகளில் அவரது திறன்கள் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப் பட்டது
இந்த மதிப்பு மிக்க விருதைப் பெற்ற டெல்டா பகுதியைச் சேர்ந்த முதல் கண் மருத்துவர் சிவ விக்னே ஷ் ஆவார் .இந்த மாநாட்டில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய கண் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



