புதுக்கடை, பிப். 9 –
இனயம் நடுத்தேரி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிப்பிள்ளை மகன் ஏசுபாலன் (46). இவருடன் அதே பகுதியை சேர்ந்த ஆன்றோரெதிஷ் (37), அமலதாசன் (40) ஆகிய 3 பேரும் சேர்ந்து தேங்காப்பட்டணம் அருகே கடலில் பாறைகளுக்கு இடையில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் முத்து குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென மூன்று பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனடியாக 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் உள்ள வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தினர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் ஏசுபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய முத்து குளிக்க சென்ற இருவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து புதுக்கடை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



