மயிலாடுதுறை, செப். 22 –
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான இக்கோவில் 120 வது ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதிக்கு பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று ஆலயத்தை சுற்றி வலம் வந்து தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



