திருச்சி, ஜூலை 28 –
திருச்சி மாவட்டம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த பிரசோத் மற்றும் அமீர் ஆகிய இருவரும் துவாக்குடி வாழவந்தான் கோட்டை இலங்கை மறுவாழ்வு மையம் பின்புறம் உள்ள காட்டினுள் தமிழக அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா என்னும் போதை பொருளை விற்பனை செய்ய வைத்திருந்த போது இருவரையும் திருவரம்பூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களது தனிப்படையினர் பிடித்து துவாக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைக்க அவர்கள் மீது கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா எனும் மனம்மயக்கும் போதை பொருள் கைப்பற்றப்பட்டு இருவரையும் எச்சரிக்கை செய்து ஜாமினில் விடப்பட்டனர்.



