By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்

Last updated: January 9, 2026 7:31 pm
January 9, 2026
51 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 9 –

தேசிய சாலைப்பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஜனவரி 1 முதல் 31 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சுரேஷ் பாபு தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் கலைசெல்வி, சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி வேப்பமூடு சந்திப்பில் நிறைவடைந்தது.

பின்னர் ஊர்வலத்தை தொடங்கி வைத்து எஸ்பி ஸ்டாலின் பேசியதாவது: சாலை பாதுகாப்பு என்பது காவல்துறை அல்லது போக்குவரத்து துறையின் மட்டும் பொறுப்பு அல்ல; பொதுமக்கள் அனைவரும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றார். இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், அதிவேகம், செல்போன் பயன்படுத்தி வாகனம் ஓட்டுதல், மது போதையில் ஓட்டுதல் போன்ற காரணங்களால் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 60,900 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 18,500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் அதிவேக ஓட்டத்தினால் ஏற்பட்டவை என்றும், ஒரு உயிரிழப்பு ஒரு குடும்பத்தின் முழு வாழ்வையும் பாதிக்கிறது என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைத்தார்.

“காவல்துறையை பார்த்தால் மட்டுமே ஹெல்மெட் அணியாதீர்கள். உங்கள் பாதுகாப்பிற்காக தினமும் கட்டாயம் அணியுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஓட்டினால் உங்கள் பிள்ளைகளும், சமூதாயமும் அதை பின்பற்றும்” என அவர் வலியுறுத்தினார்.

பேரணியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாணவர்கள், போக்குவரத்து பணியாளர்கள், வாகன விற்பனையாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு” என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடித்து, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கன்னியாகுமரியில் களை கட்டிய கோடை சீசன்: காலை மாலை சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
குமரியில் கொடிநாள் வசூல் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா துவக்கி வைத்தார்
100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்
மூன்று புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

May 13, 2026
50 Views
டாஸ்மாக் கடை அருகே சடலமாக கிடந்த ஆட்டோ டிரைவர்
ஸ்ரீ மாரியம்மன் திருவிழா
விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
களியக்காவிளை அருகே போலி நகைகளை அடகு வைத்து பண மோசடி: 2 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account