கோவை, ஏப்ரல். 25 –
கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அத்திப்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீ வாரி மஹால் அருகில் சிட்டி யூனியன் வங்கியின் 685 வது அக்ரகார சாமகுளம் பகுதியின் புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மண்டல பிரிவு மேனேஜர் ஸ்ரீராம் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். இந்தக் கிளையை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சமூக ஆர்வலர் ரமேஷ் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கிளையின் துவக்க விழாவை கோவில்பாளையம் ஜி.பி.டி.டயாபட்டிக் சென்டர் உரிமையாளர் டாக்டர் பிரியதர்ஷினி அரவிந்த் குத்து விளக்கு ஏற்று வைத்து வாழ்த்தி பேசி சிறப்பித்தார்கள்.
இதில் வங்கி நிர்வாகிகள் பேசியதாவது: இந்த வங்கி ஏழை எளிய கிராம மக்கள் பயன்படும் விதத்தில் எளிய வழிகாட்டுதலோடு இணைந்து சேவைகள் தரப்படுவதாகவும், அடுத்து அனைத்து உறுப்பினர்களிடமும் தங்களது வங்கி ஊழியர்கள் குடும்ப நண்பர்களை போன்று பழகிவிடுவார்கள் என கூறி பேசினார்கள். இந்நிகழ்வில் உடன் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.



