மார்த்தாண்டம், ஜன. 26 –
மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் மகள் சோபியா (27). காப்புக்காடு பகுதியில் உள்ள நகை கடையில் வேலை செய்து வந்தார். சம்பவ தினம் வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்ற சோபியா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அந்த பெண்ணின் அண்ணன் சுபின் (30) என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சோபியா குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சோபியா நேற்று தனது காதல் கணவன் பிவின் (28) என்பவருடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் கூறுகையில், சோபியா வேலைக்கு செல்லும் வழியில் விபின் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அப்போது ரெண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் ஆக மாறி உள்ளது. இரண்டு பேரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து கடந்த வாரம் விபின் காதலி சோபியா வீட்டில் திருமணத்திற்கு பெண் கேட்டு சென்றார். ஆனால் சோபியா குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இதனால் காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் சோபியா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இதையடுத்து இரண்டு பேரும் மேஜர் என்பதால் போலீசார் காதல் கணவருடன் சோபியாவை அனுப்பி வைத்தனர்.



