கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த உடல்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அனாதையாக இறந்த உடல்களை தனது சொந்த செலவில் எடுத்து வந்து தனது சேவையாக நினைத்து கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் செய்து வருகிறார்.
இவர் கடுமையாக கொரோனா காலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்த சடலங்களை தனது வாகனத்தில் ஏற்றி சென்று பல உடல்களை தைரியமாக அடக்கம் செய்து வந்துள்ளார். இதேபோன்று இப் பகுதியில் உள்ள அனாதைகள் மற்றும் ஏழ்மையான நபர்கள் இறந்து விட்டால் அந்த உடலை அவர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி தனது சொந்த சேவையாக அவர்களின் உடலை அடைக்கலம் செய்யவும் தவணை எரிவாயு மேடை என்று தனது வாகனத்தில் சொந்த செலவில் செய்து வருகிறார்.
ஆனாலும் இவரை வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் மற்ற வாகன ஓட்டிகள் ஒரு சகுனமாக கருதி இவரை வாகனங்கள் நிறுத்த விடாமல் செய்து வருகின்றனர் அது ஒரு கெட்ட சகுனம் என்று கருதி இவரின் இந்த வாகனங்களை நிறுத்த விடாமல் தடுத்து வருகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடமும் காவல்துறையிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டு நம்முடையே பேசினார்
இவர் தற்போது இருந்த உடல்களை அடக்கம் செய்ய நடமாடும் தகன எரிமேடு வாகனம் ஒன்றை தனது சொந்த செலவில் எடுத்து வந்து இறந்தவர்கள் உடலை குறைந்த செலவில் அனாதை பிணங்களின் உடலை இலவசமாக செய்து வருகிறார்.
மேலும் இவரை தொடர்பு கொண்டால் உடனடியாக விரைந்து சென்று இவரால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.



