கோவை, ஜூலை 06 –
கோவையில் சீட்டு பணத்தை,எடுத்து கொண்டு திரும்ப செலுத்தாமல்,தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக வார்டு கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கபட்ட நபர், அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து காவல் கண்காணிப்பாஎளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான பிரதிப்ராஜன், இவர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய அவர் கூறியதாவது: நான் வேடப்பட்டி பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏலச்சுட்டு நடத்தி வருகிறேன். அந்த ஏழு சீட்டு எனது குடும்ப உறுப்பினர்களுக்காக, எனது சொந்த பந்தங்களுக்காக உருவாக்கப்பட்டது. அதில் வெளி நபர்கள் யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டோம். இந்த நிலையில் எங்களது பகுதியைச் சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலர் தானும் உங்களது ஏல சீட்டில் இணைந்து கொள்வதாக தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
அதனை மறுத்து வந்தேன். ஆயினும் அவர் எங்களது பகுதி கவுன்சிலர் என்பதால் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்க முடியாமல், அவரை கடந்த 2021 ஆம் ஆண்டு குழுவில் இணைத்து கொண்டேன்.மேலும் ஒவ்வொரு குழுவிலும் தலா 10 சீட்டு என்ற வகையில் சுமார் 100க்கும் மேற்பட்ட சீட்டை அவர்களது, குடும்பத்தை சேர்ந்தவர்களை இணைந்து கொண்டு ஒவ்வொரு முறையும் சீட்டு பணத்தை பெற்றுக் கொண்டு, தற்பொழுது அதனை முறையாக, மாதாந்திர தவணையில் செலுத்தாமல், பல்வேறு காரணங்களை சொல்லி அலைக்கழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகை, தற்போது 58 லட்சத்து 54 ஆயிரத்து 815 ரூபாய், இந்த பணத்தை, திருப்பி தர மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, கட்சியின் பெயரை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்யாமல், எங்களை மிரட்டி வருகிறார், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



