களியக்காவிளை, டிச. 23 –
களியக்காவிளை அருகே மருதங்கோடு பகுதியை சார்ந்த சிவசூர்யா (23) கொத்தனார் வேலை செய்து வருகிறார். கழுவன்திட்டை பகுதியை சார்ந்த அன்பையன் மகன் அஜீஷ் (27), சசிகுமார் மகன் ஜெபின் (25) இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக வேலைக்கு சென்று வருவதில் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவத்தன்று மூன்று பேரும் திருத்துவபுரம் பெருங்குளம் அருகே அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது மூன்று பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த அஜீஷ், ஜெபின் இரண்டு பேரும் சிவசூர்யாவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிவகுர்யா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


