தருமபுரி, ஆகஸ்ட் 06 –
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த விழாவில் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும், பெங்களூர் மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர். பிறகு நெய் தீபம், தேங்காய் தீபம், எலுமிச்சை பழதீபம், ஷாம்பூசணிக்காய் தீபம் ஆகியவைகளை பக்தர்கள் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருக்கோவில் சார்பில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



