திருச்சி, ஜூன் 6 –
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதை தொடர்ந்து, திருச்சியில் நாளை மறுநாள் (ஜூன் 8) பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும், தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைமை தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.


