களியக்காவிளை, பிப். 21 –
அதங்கோடு, ஆனந்தநகர் மாயா கிருஷ்ணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷயை முன்னிட்டு நாளை 22-ம் தேதி காலை கணபதி ஹேரமம், அதிவாசத்தில் பள்ளியுணர்த்தல், உஷபூஜை, மரப்பாணி முகூர்த்ததானம், பிரம்ம கலசாபிஷேகம் மஹா கும்பாபிஷேகம், திருகொடிமரம் பிரதீஷ்டை நடக்கிறது.
தொடர்ந்து நடக்கும் வாழ்த்தரங்கத்தில் கோயில் தலைவர் சசிகுமார் தலைமை வகிக்கிறார். சட்ட ஆலோசகர் சாவார்க்கர் வரவேற்கிறார். பொதுச் செயலாளர் சதீஷ், பொருளாளர் ராஜு முன்னிலை வகிக்கின்றனர்.
வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம சுவாமி சைதன்யானந்த ஜி மஹராஜ், குலசேகரமடம் வீரவநல்லூர் சுவாமி இராம் அப்ரமேய இராமானுஜய ஜியர், அகில பாரதா சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி பத்மானந்த சரஸ்வதி மஹராஜ், டாக்டர் மோகன் நாயர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், பாஜ.க மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மாவட்ட தலைவர் சுரேஷ், எம்.ஆர் காந்தி எம்.எல்.ஏ. இந்து நாடார் கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் முருகானந்தம் நாடார், நாடார் சங்க குமரி மாவட்ட தலைவர் காமராஜ், இந்து முன்னனி மாநில துணைத் தலைவர் அரசு ராஜா, ஏ.பி,வி. பி தென் தமிழக தலைவர் சவிதா ராஜேஷ் உள்ளிட்டோர் பேசுகின்றனர். கோயில் செயற்குழு உறுப்பினர் கருணகுமார் நன்றி கூறுகிறார்.
தொடர்ந்து பிரசன்ன பூஜை, தீபாராதனை, மஹா அன்னதானம், சிறப்பு தீபாராதனை ஸ்ரீ பூதபலி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடந்து திருக் கொடிமர பிரதிஷ்டை விழா இரண்டு நாட்கள் நடக்கிறது.



