விளாத்திகுளம், அக்டோபர் 06 –
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், தாப்பாத்தி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்களுக்கு புதிதாக ரூ. 415 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 72 வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பயனாளிகளுக்கு சாவிகள் வழங்கி குத்துவிளக்கேற்றினார்கள்.
இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷி, வட்டாட்சியர் சுபா, திமுக ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், அன்புராஜன், இம்மானுவேல், திமுக கிளை செயலாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



