தூத்துக்குடி, டிசம்பர் 9 –
கயத்தாறு அருகே உள்ள சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டோல்கேட் அருகே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெங்களூர் பொம்மாவில் இருந்து திருநெல்வேலிக்கு டாடாஇன்பிரா லோடு ஆட்டோவில் சுமார் 700 கிலோ குட்கா புகையிலையை திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணன் (26).
இவர் டாட்டா ஏசியில் டிரைவராக வாகனத்தை ஓட்டி வரும்போது இவருக்கு வழிகாட்டியாக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் ஜோஸ்வாராஜா (27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வழிகாட்டியாக டாடா லோடு ஆட்டோவிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும்போது போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை சோதனை நடத்திய போது அவர்களிடம் இருந்து சுமார் 700 கிலோ புகையிலை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டுவரப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இருசக்கர வாகனமும் டாட்டா ஏசி வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.



