By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “போலிச் செய்திகளை முறியடிக்க AI, Fact-checking தொழில்நுட்பங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > “போலிச் செய்திகளை முறியடிக்க AI, Fact-checking தொழில்நுட்பங்கள்
தமிழ்நாடுதிண்டுக்கல்

“போலிச் செய்திகளை முறியடிக்க AI, Fact-checking தொழில்நுட்பங்கள்

Last updated: September 12, 2026 3:32 pm
September 12, 2026
8 Views
Share
SHARE

திண்டுக்கல், செப்.12:

இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB), தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. நவீன டிஜிட்டல் யுகத்தில் செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், செயற்கை நுண்ணறிவு (AI), உண்மை சரிபார்ப்பு (Fact-checking) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் யாஷ் கிராண்டே ஹோட்டலில் நடைபெற்ற பயிலரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ஜெயபாரதி தொடங்கி வைத்தார். PIB சென்னை இயக்குநர் பி.அருண்குமார் வரவேற்றார். நவீன இதழியலின் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து பேசிய தென் மண்டல தலைமை இயக்குனர் வி.பழனிசாமி, அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் பத்திரிகையாளர்கள், அரசு நலத்திட்டங்களை முழுமையாக அறிந்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.

மேலும், உண்மைச் செய்திகளை விட போலிச் செய்திகள் வேகமாகப் பரவும் சூழலில், செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் திறனை பத்திரிகையாளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் செய்தியாளர்களின் திறன் மேலும் மேம்படும் என்றும் தெரிவித்தார். சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பத்திரிகையாளர்கள் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, பத்திரிகையாளர் நலத் திட்டத்தின் கீழ் விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. கோழிக்கோடு பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஹபீப் ரஹ்மான் ‘உண்மை சரிபார்ப்பு’ குறித்து பயிற்சி அளித்தார். தோட்டக்கலைத் திட்டங்கள் குறித்து துணை இயக்குநர் பி.காயத்ரியும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பாரத இயக்கம் குறித்து காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பொறியாளர் ரூசோ காளையும் விளக்கினர்.

இம்முகாமில் மூத்த மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்கள், இதழியல் மற்றும் காட்சித் தொடர்பியல் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நிபுணர்களுடன் கலந்துரையாடினர். முடிவில் மத்திய தகவல் தொடர்பு பணியகத்தின் கள விளம்பர உதவியாளர் பி.வேல்முருகன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பாக பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்
செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழகத்தில் பாரதிய ஜனதா வேரூன்றிவிட்டது: நாகர்கோவில் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மகளின் மர்ம மரணத்திற்க்கு நீதி கேட்டு

November 5, 2024
75 Views
நண்பனை கொன்ற வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
பாலடைக்கட்டி பற்றிய விழிப்புண்ர்வு அதிகம் தேவை
படந்தாலுமூட்டில் அகத்தியர் ஜெயந்தி விழா
திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் மரம் அகற்ற கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account