நாகர்கோவில் – நவ – 05,
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சரல் பகுதியைச் சேர்ந்தவர் அன்ன செல்வம் (56), (க/பெ) ரெத்னசாமி (60), தனது மகன், மற்றும் மகளுடன் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்துள்ளார் . பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது :-
எனது இளைய மகள் அஜிதா (27) என்பவரை கடந்த 25 .10. 2023 அன்று சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த அய்யா துறை மகன் சக்திவேல் (33) என்பருவக்கு 25.10.2023 அன்று இரு வீட்டார் சம்மந்தத்துடன் பெரியோர்கள் முன்னிலையில் பேசி முடித்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது . திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்சணையாக 18 பவுண் தங்க நகையும், ரூபாய். 2 லட்சம் ரொக்கமாகவும், சீர்வரிசைப் பொருள்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்க்கு பின்பு சக்திவேல், எனது மகளை அடிக்கடி அடித்து உரைத்து துன்புறுத்தி வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்தார் . அவர் எதை செய்தாலும் சக்திவேலுக்கு ஆதரவாக அவனது உறவினர்களான மணிகண்டன், கண்ணன், கிருஷ்ணன், ஆகியோர் இருந்து வந்தனர். அதன் பின்பு சக்திவேல் கடந்த 10.04. 2024 அன்று எனது மகளை அடித்து காய படுத்தினான் நாங்கள் இது சம்மந்தமாக வெள்ளி சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்து எனது மகளின் வாழ்கை நலன் கருதி மேற்ப்படி சக்தி வேலை கண்டித்து சமாதானம் செய்து போலீசார் எனது மகளுக்கு நாள் குறிப்பு (டைரி) எழுதும் பழக்கம் உள்ளதால் தொடர்ந்து தினமும் வீட்டில் நடக்கும் சம்பவங்களை தினமும் டைரியில் எழுதியதையும் போலீசார் கைப்பற்றி வைத்து விட்டு இருவரையும் சமாதப் படுத்தி வீட்டிற்க்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்பு மீண்டும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு எனது மகளை கொடுமைப்படுத்தினர் . அதன் பிறகு 18.10.2024 அன்று எனது மகளை சூரப்பள்ளம் பகுதியில் வேறு வீடு வாடகைக்கு எடுத்து சக்திவேல் அழைத்து சென்றான். 24. 10.24 அன்று இரவு 9.30 மணிக்கு கணவன் வீட்டில் இருந்து தொலைப்பேசியில் எனது மகள் என்னை தொடர்பு கொண்டு தன்னை அனைவரும் கொடுமைப்படுத்துவதாக என்னிடம் கூறினாள் . நான் அதற்க்கு இரவு நேரம் என்பதால் நான் மறுநாள் காலையில் வந்து பார்க்கிறேன் என்று எனது மகளிடம் கூறினேன் . மறு நாள் காலை சுமார் ஆறு மணியளவில் எனது மகள் இறந்து விட்டாள் என்று சக்திவேலிடம் இருந்து எனக்கு தகவல் வந்தது . நான் எனது மகளை பார்க்க அங்கு சென்ற போது எனது மகளின் உடல் மர்மமான முறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் காணப்பட்டாள் , நான் இது குறித்து சக்திவேலிடம் கேட்ட போது மாற்றி , மாற்றி, தவறான தகவலை கூறினான். இந்த நிலையில் எனது கணவர் சம்பவம் குறித்து இராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . அதன்படி போலீசார் வழக்குபதிவு செய்த பிறகு எனது மகளின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு நல் அடக்கம் செய்யப்பட்டது . இராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் தடையங்களை சேகரித்து விட்டு சென்றனர். அதிலும் எனது மகளின் செல்போன், மற்றும் அவளது டைரியை போலீசார் எடுத்து சென்றனர். நாங்கள் அதை கேட்டதற்க்கு ஆர்டி ஒ அலுவலகத்தில் அனைத்தையும் ஒப்படைத்து விடுவோம் வழக்கு முடிந்த பின்னர் தான் உங்களிடம் ஒப்படைப்போம் என கூறினர். ஆனால் எனது மகள் தற்கொலை செய்யும் அளவிற்க்கு செல்ல மாட்டாள் என்பது எனக்கு உறுதியாக தெரியும் , எனது மகளை சக்திவேல் வரதட்சணைக்காக அவளை கொடுமை படுத்தி கொலை செய்து விட்டு தற்க்கொலை செய்து கொண்டதாக கபட நாடகம் நடத்தி வருகின்றனர். இது குறித்து இராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் பல முறை புகார் மனுக்கள் அளித்தும் போலீசார் புகார் மனுவை வாங்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர் . ஆகவே எனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதால் தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சக்திவேல் மற்றும் கொலைக்கு காரணமானவர்களின் மீது உரிய முறையில் நேர்மையான காவல் அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்க்கொண்டு அவர்களுக்கு தண்டணை பெற்று தரும்படி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.



