களியக்காவிளை, ஜன. 8 –
படந்தாலுமூடு சிவராமன் ஆசான் மெம்மோரியல் சித்த வர்ம குருகுலம் மற்றும் அனுக்கிஹா சித்த வர்ம வைத்தியசாலையும் இணைந்து அகஸ்தியர் ஜெயந்தி விழா நடத்தப்பட்டது. விழாவில் டாக்டர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பிரின்ஸ் வைத்தியர் வரவேற்றார்.
ரிச்சார்டு ஸ்டேண்டோ குருக்கள், வாசுதேவன் வைத்தியர், சுவாமி ராஜ வைத்தியர் மோகன்லால், பிறேமா மோகன் ராஜ் , குருகுல ரட்சாதிகாரி டாக்டர் விஜயன், பெங்களூர் பகுதியை சார்ந்த நாராயணன், ராஜஸ்தானில் இருந்து வருகை தந்த ஜிம் மல்ட்டி வெர்சிட்டி, இயக்குனர் கமலேஷ் றாவல், உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்ந்து கன்னட மொழியில் முதன் முதலாக வெளியிடப்பட்ட சமல் காரா சேதனா பிந்துக்கார் என்னும் நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுஜித் ஆசான், மனுவேல் ஆசான், சாம்ராஜ் வைத்தியர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்பு வைத்தியர் நன்றி கூறினார்.



