தருமபுரி, பிப்ரவரி 10 –
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். டி என் சி எஸ் சி எடை தராசம் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனியத்தை இணைத்து சரியான எடையில் அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஊதிய மாற்ற குழு நகர செயலாளர் இளநிலை உதவியாளர் ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் பிப்ரவரி இறுதிக்குள் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும். அனைத்து நியாய விலை கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து நியாய விலை கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும். ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். நியாய விலை கடை பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மகளிர் நியாய விலைக் கடையை அரசே நடத்தி அப்பணியாளருக்கு ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



