திருச்சி, ஏப்ரல் 25 –
திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் கோகுலேஸ்வரன், நேற்று முன்தினம் (ஏப்ரல் 23) நடைபெற்ற தேர்தலில் இந்தியக் குடிமகனாக முதல் முறையாக வாக்களித்தார். 40 வயதிற்கு அருகில் இருந்தாலும், இந்தியராக தன் வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது என்ற உணர்வு இருப்பதாக அவர் தெரிவித்தார். இது தனது நீண்ட நாள் கனவு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.



