By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவி வேறொருவருடன் திருமணம்; அதிர்ச்சியில் கணவன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனைவி வேறொருவருடன் திருமணம்; அதிர்ச்சியில் கணவன்
கனஂனியாகுமரிமாவட்டம்

மனைவி வேறொருவருடன் திருமணம்; அதிர்ச்சியில் கணவன்

Last updated: May 14, 2025 1:01 pm
May 14, 2025
42 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 13

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26).கொத்தனார். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. அபிஷாவின் சொந்த ஊர் குலசேகரம் அருகே உள்ள தும்பகோடு. திருமணத்துக்கு பின் அஜித்குமார் தனது மனைவி அபிஷாவின் வீட்டில் வசித்து வந்தார்.

அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக பணியாற்றினார். கடந்த 2ம் தேதி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்ற அபிஷா, அதன் பின்னர் அஜித்குமாரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தனது மனைவி எங்கே என்று அஜித்குமார் தேடி வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அபிஷா வேறொரு வாலிபரை 2வதாக திருமணம் செய்த வீடியோக்கள் வெளியானது.

இதையடுத்து, தனது மனைவியை மீட்டு தருமாறு அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்து கதறினார்.போலீசார் வழக்கு பதிந்து, வீடியோ காட்சிகள் குறித்து விசாரித்தனர். அப்போது 2வதாக திருமணம் செய்த கணவருடன் குமாரபுரம் பகுதியில் அவர் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். நேற்று முன்தினம் அந்த வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்தவர்களிடம் அபிஷா குறித்து விசாரித்தனர்.

போலீசார் சென்றிருந்த சமயத்தில், அபிஷா தனது 2வது கணவருடன் விருந்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அப்போது தான் வந்திருந்தார். அவரிடம் முதல் கணவரான அஜித்குமார் குறித்து போலீசார் கூறினர். இதை கேட்டதும் திரு…திரு…வென விழித்த அபிஷா, தனது குட்டு அம்பலமானதை அறிந்து எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றார்.

அதன் பின்னர் நடந்த சம்பவத்தை போலீசார் 2வது கணவர் மற்றும் அங்கிருந்தவர்களிடம் விளக்கினர். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அபிஷா ஏற்கனவே திருமணமானவர் என்பது தனக்குதெரியாது என்று, 2வது கணவர் கூறினார்.

இதையடுத்து அபிஷாவை போலீசார் அருமனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தகவலறிந்து முதல் கணவர் அஜித்குமாரும் காவல் நிலையம் வந்தார். புதிய தாலியுடன் நின்ற அபிஷாவை பார்த்த அஜித்குமார் நடந்த சம்பவத்தை மறந்து விடலாம். உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. என்னுடன் வந்து விடு என கெஞ்சினார். ஆனால் அபிஷா அஜித்குமாருடன் செல்ல முடியாது என கூறி விட்டார். 2வதாக அபிஷாவை மணம் முடித்தவர் எதுவும் சொல்லாமல் நின்றார். அவரது உறவினர்களும் பேச முடியாத நிலையில் இருந்தனர்

.இதையடுத்து அபிஷாவின் தாயாரை அழைத்த போலீசார், உங்கள் மகளை அழைத்து சென்று புத்திமதி கூறுங்கள். 2 நாட்கள் கழித்து முடிவெடுத்து வாருங்கள் என கூறி அனுப்பினர். இதையடுத்து அபிஷாவை அவரது தாயார் அழைத்து சென்றார். ஆனால் முதல் கணவரும், தற்போது அபிஷாவின் வீட்டில் இருப்பதால், அபிஷா தாயாருடன் செல்லாமல், தனது சித்தி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார்.

அபிஷா யாருடன் வாழ போகிறார்? அவரை திருமணம் செய்த இரு வாலிபர்களின் நிலை என்ன? என்ற பரபரப்புக்கு விடை கிடைக்காத நிலை உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இயற்கை மற்றும் யோகா இளங்கலை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மணக்குடி பகுதியில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனப் பயிற்சி
புதுக்கடை அருகே புளிக்கடையில் பயங்கர தீ விபத்து
மருத்துவ வசதிகளை மேம்படுத்த விவாதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்

February 28, 2025
55 Views
மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்
10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
கல்யாண் ஜூவல்லர்ஸ் கூடுவாஞ்சேரி மற்றும் புரசைவாக்கத்தில்
பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account