ஸ்ரீவில்லிபுத்தூர்ர் கலசலிங்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் பாண்டியன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பல்கலை பேராசிரியர் சங்கீதா,”சங்க கால முதல் செவிலியர்களின் பங்கு ” பற்றி பேசினார். செவிலியர் கண்காணிப்பாளர் பிரிசில்லா இன்பரதி வரவேற்றார். தர்மராஜ் வாழ்த்துரை வழங்கினார்.அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்று உறுதி மொழி எடுத்தனர். சிறந்த செவியலருக்கான விருதை பானுமதி,சுதா ஆகியோருக்கு இயக்குநர் வழங்கினார். மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிஷா நன்றி கூறினார்.



