செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் பொழிச்சலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஆலய கும்பாபிஷேகம் விழா ஆலய அறங்காவலர்கள் அருளானந்தம் பழனி ஆகியோர் தலைமையில் ஆலய அர்ச்சகர் சுந்தர்ராஜன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவினைத் தொடர்ந்து மகா நிவேதனம் தீப ஆராதனை சிறப்பு அபிஷேகம் வேத பிரபந்த சாற்று முறை தீர்த்த பிரசாதம் சர்வ தரிசனம் அதன் பின்னர் வருகை புரிந்த பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள், ஆலய திருப்பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த விழாவில் கோபாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.



