By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடன் வெப்ப அலை சிகிச்சை பிரிவு தயார்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடன் வெப்ப அலை சிகிச்சை பிரிவு தயார்!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளுடன் வெப்ப அலை சிகிச்சை பிரிவு தயார்!!

Last updated: April 27, 2026 6:51 pm
April 27, 2026
34 Views
Share
SHARE

திருப்பூர், ஏப். 27 –

கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. கடந்த ஒருவாரமாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த வெயிலின் தாக்கம் காரணமாக உடலின் வெப்ப நிலை அதிகமாக உயருவது, வியர்வை வராமல் தோல் வறண்டு சிவந்து போவது, கடுமையான தலைவலி மற்றும் மயக்கம், குமட்டல் அல்லது வாந்தி எடுத்தல், இதயத்துடிப்பு அல்லது பேச்சு உளறல் போன்ற அறிகுறி ஏற்படும் என டாக்டர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 படுக்கைகளுடன் கூடிய வெப்ப அலை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: வெயிலின் கொடுமையால் மக்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து, மயக்கம், சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அவ்வாறு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தனிப்பிரிவு
உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு தடையற்ற ஆக்சிஜன் வசதி, குளுக்கோஸ் ஏற்றும் வசதி, தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. வெப்ப அலை காற்று வீசுவதால் அதிக வியர்வை ஏற்ப டும்போது
தோல் மூலம் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக கிட்னி பாதிக்கப்படும்.

அடுத்தகட்டமாக இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை தவிர்க்க மதியம் வெயிலில் செல்லாமல் 12 மணி முதல் மாலை 4 வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முதியவர்கள், குழந்தைகள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. மெல்லிய, உலர் ஆடைகள் அணியலாம். வெள்ளை நிற பருத்தி ஆடைகளை ஆடைகளை அணியலாம் கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது குடை, தொப்பி அல்லது தலைக்கவசம் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

கண்களுக்கு தரமான குளிர் கண்ணாடி அணியலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், தர்பூசணி, மோர், கம்பங் கூழ் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது உடல் வெப்பத்தை குறைக்க உதவும். மயக்கம் அல்லது அதீத சோர்வு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை தொடர்பு கொள்ள வேண்டும். மயக்கமடைந்தவர்களை குளிர்ந்த இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி களைகட்டியது: குவிந்த சுற்றுலா பயணிகள்
தமிழக முதலமைச்சர் 72வது பிறந்தநாள் விழா
குமரி பகவதியம்மனுக்கு நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு; பக்தர்கள் குவிந்தனர்
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
குமரி – கேரளா எல்லை பகுயில் சந்தேகத்தின் பேரில் மனைவியை குத்தி கொன்ற கணவன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ நடராஜா நாட்டியஞ்சலி சலங்கை பூஜை விழா.

May 12, 2024
149 Views
தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
வாசுதேவநல்லூரில் 1008 பானை “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா: திமுக அரசின் மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account