சங்கரன்கோவில், செப். 27 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 8வது வார்டு லட்சுமியாபுரம் 3ம் தெருவில் வசித்து வரும் மக்கள் தங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் பொதுக் குழாய் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கபட்டு பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய குடிநீர் குழாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் சாம்கிங்ஸ்டன், பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய பொது குடிநீர் இணைப்பை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் பிரகாஷ்,
நகர அவைதலைவர் முப்புடாதி, முன்னாள் மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், வார்டு செயலாளர்கள் மகாமாரியப்பன், நடராஜன், வைரவேல் சுப்பிரமணியன், செந்தில்குமார், நகர மாணவரணி வெங்கடேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் புஷ்பம், செல்வராஜ், ராஜா ஆறுமுகம், பாக முகவர்கள் ராஜ், சபாபதி, நகரத் தொண்டரணி அருணாச்சலம், நகர இளைஞரணி ஜான்சன் மற்றும் சக்தி, ராமர் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.



