சங்கரன்கோவில், நவ. 3 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குத் திருக்குறள் திட்ட உறுப்பினர் முனைவர் வேலம்மாள் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கனகலட்சுமி முன்னிலை
வகித்தார். திருக்குறள் திருப்பணிகள் குறித்து உறுப்பினர் தீத்தாரப்பன் அறிமுக உரையாற்றினார். ‘வள்ளுவர் காட்டும் வாழ்வியல்’ என்ற தலைப்பில் முனைவர் சங்கர் ராம் கருத்துரை வழங்கினார். திருக்குறளில் உயிரினங்கள்’ என்னும் தலைப்பில் செந்தில் ஆண்டவன் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், வெள்ளாளங்குளம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன், புலவர் வாரியார்தாசன், தமிழாசிரியர் கிருஷ்ண ரேவதி, திமுக நகரச் செயலாளர் பிரகாஷ், சங்கரன் கோவில் நீர்நிலைகள் பாதுகாப்பு மன்ற உறுப்பினர் ஆறுமுகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் விஜயப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாணவர் பாடாலிங்கம் நன்றி கூறினார். கருத்தரங்கில் பள்ளி கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பொது மக்களும் பங்கேற்றனர்.



