ஈரோடு, ஜூலை 24 –
பெருந்துறையில் உள்ள கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் சர்வதேச வேலைவாய்ப்புகளை நோக்கமாகக் கொண்டு சந்திரா ஸ்கூல் ஆப் யோகா வர்க்கலா கேரளா உடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக திறன் மேம்பாடு சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து யோகா அலையன்ஸ் சான்றிதழ் வழங்கும் விழாவும், இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவும் இரண்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்றன. முதல் நாளில் நடைபெற்ற யோகா அலையன்ஸ் சான்றிதழ் வழங்கும் விழாவில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, சர்வதேச சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் அதற்குரிய பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதையடுத்து இறுதியாண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரதாப் சிங் வரவேற்றார். கே.வி.ஐடி அறக்கட்டளை துணைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கொங்கு சுல்வி நிறுவனங்களின் தாளாளர் கார்த்திகேயன் டாக்டர் விஜயராகவன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் ராகவேந்திரசாமி, தாளாளர்கள் கார்த்திகேயன், கிருஷ்ணன், சச்சிதானந்தன் அறக்கட்டளை உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். முடிவில் டாக்டர் ராஜரத்தினம் நன்றி கூறினார் .



