திருச்சி மாவட்டம் தா. பேட்டை அருகே உள்ள வளையெடுப்பு கிராமத்தைச் சேர்ந்த எல்ஐசி முகவர் சித்ராதேவி, முசிறி அருகே வாழவந்தி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த துறையூர் அருகே கொத்தம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தரணிதரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜம்புமனாபுரம் போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



