ஈரோடு, மார்ச் 26 –
ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி பத்மாவதி. இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிரகாஷ் நகை மதிப்பீட்டாளர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈரோடு வெட்டுகாட்டு வலசை சேர்ந்த ஒரு பெண் அறிமுகமானார். அவர் எனது கணவரிடம் வங்கியில் மற்றவர்களின் பெயரில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகையை மீட்டு பிறகு அதை விற்று விடலாம். அதன் மூலம் வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். இதற்காக எனது கணவருக்கு சிறிய கமிஷன் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த பெண்ணிடம் அவசர தேவைக்கு ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் இப்போது ரூ.80 லட்சம் வேண்டும் என்று அந்த பெண் எனது வீட்டுக்கு சில பேருடன் வந்து மிரட்டுகிறார். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


