குளச்சல், ஜூன் 17 –
குளச்சல் நகராட்சி ஆணையரை அதிமுக நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் அதிமுகவினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: குளச்சல் ஏ.வி.எம் கால்வாய் மற்றும் வெள்ளியாகுளம் போன்ற நீர் நிலைகளை உடனடியாக தூர்வாரி பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்கு மாதம் 30 ரூபாய் குடிநீர் வரி அதிகரித்து உள்ளதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், குளச்சல் நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளையும், மின் விளக்குகளையும் சரி செய்ய வேண்டும் எனவும், கொட்டில் பாடு, சுனாமி குடியிருப்புகளில் சாக்கடை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதால் கொடிய நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்ட உள்ளதையும் உள்ளடக்கிய பல்வேறு கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுக ராஜா, முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரவீந்திர வர்சன், முன்னாள் செயலாளர் அருள்தாஸ், ராஜ்குமார், பெலிக்ஸ் ராஜன், ஜெகன் உட்பட பலர் உடனிருந்தனர்.



