மார்த்தாண்டம், பிப். 6 –
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதி சேர்ந்தவர் ராஜேஷ் மகன் அபின் (18). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் அபின் தொடர்ந்து கல்லூரிக்கு செல்லாமல் விடுமுறை போட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
சம்பவ தினம் அபினின் தாய் ரெஞ்சு (40) என்பவர் கல்லூரியில் சென்று மகன் கல்லூரி செல்லாதது குறித்து விசாரித்து விட்டு வந்து ஏன் கல்லூரிக்கு செல்லவில்லை என மகனிடம் வந்து கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த அபின் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இதுவரை வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெஞ்சு இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபினை தேடி வருகின்றனர்.


