சுசீந்திரம், நவ. 24 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற உள்ளதால் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்திடம் கோரிக்கை
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சுமார் 30 அடி நீளத்திற்கு பெயர்ந்து விழுந்தது. இதனால் தற்காலிக தடுப்பு சுவர் சாக்கு பைகளில் மண் அடைத்து அதிகாரிகளால் கட்டப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தாலும் மழை காரணமாக வேலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிற.து
இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக தெப்பக்குள தடுப்புச் சுவரை விரைவாக கட்டி முடித்து குளத்தை தூர்வார உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் பரிந்துரை செய்ய வேண்டி நேற்று ஹிந்து சேவா சங்கம் சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.



