ஈரோடு, ஏப். 23 –
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, அந்தியூர், கோபி, பவானி சாகர் ஆகிய 8 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 118 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த 8 தொகுதிகளிலும் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 2379 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டது.
இதில் பெரும்பாலான வாக்கு சாவடிகளில் காலையிலேயே விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. ஒரு சில வாக்கு சாவடிகளில் மட்டுமே மந்தமாக இருந்தது. இந்த வாக்கு சாவடிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை போக போக அதிகமானது. பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இளம் வாக்காளர்கள் அதிக அளவில் ஆர்வமாக ஓட்டு போட்டதை காண முடிந்தது.
8 சட்ட சபை தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணி நிலவரப்படி சராசரியாக 90 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இருப்பினும் இறுதி கட்ட ஓட்டுப் பதிவு சதவீதம் மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


