By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Last updated: June 25, 2026 6:57 pm
June 25, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 25 –

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணை முன்பு தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று 4 ரோடு, ரோட்டரி பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். மேலும் “போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்”, “இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்”, “போதைப்பொருளை ஒழிப்போம்” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன்: போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிப்பதாக தெரிவித்தார். போதைப்பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து, சமூகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேல்மாறல் சேவா அறக்கட்டளை நடத்தும் வேல்மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு நிகழ்ச்சி
தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு!!
தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக தலைமையில் திமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-வது பிறந்த நாள் விழா
தருமபுரி அருகே நிலங்கள் பத்திரப்பதிவுக்கு தடையை நீக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கிராம மக்கள் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆறுகாணி அருகே பெண் வீட்டில் 60 ரப்பர் சீட்டுகள் திருட்டு

September 18, 2025
45 Views
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
11வது ஆண்டு மத நல்லிணக்கம் இப்தார்
திருப்பத்தூர் அடுத்த நாக குட்டை கிராமத்தில் 2-ம் ஆண்டு ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய திருவிழா
ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account