திருச்சி, ஜூன் 6 –
லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி ரயில் நிலையத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மிப்டின் என்பவரின் லேப்டாப் திருடுபோன வழக்கில், ராம்ஜி நகரைச் சேர்ந்த பரணிதரன், கே.கள்ளிக்குடியைச் சேர்ந்த ரோகன் தேவ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பரணிதரன் தமிழக வெற்றிக் கழகத்தின் மணிகண்டம் ஒன்றிய செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



